கவிதை நேரம்-09.05.2024
கவி இலக்கம்-1870
“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே”
————————–
ஐயிரண்டு திங்கள் அவனியிலே என்னைச் சுமந்து
பகல் இரவு பாராமல் விழித்திருந்து
பட்டினியையும் ஒழுங்கே பறக்கவிட்டு
அவனியிலே உதிரத்தையே சிந்தியவள்
கருவிலே காத்து சுமந்தவள்
கண்ணென எண்ணி காத்து கிடந்தவள்
கைகளிலும் இடுப்பு தோள்களிலும்
சுமைகளான பொழுதுகளையும்
சுமமாக எண்ணி எனைக் காத்தவள்
இரத்தத்தை பாலாக்கினாள்
முத்தத்தை அன்பு பரிசாக்கினாள்
துன்பம் அகற்றி பொறுமைசாலியானாள்
மனதெல்லாம் மனக்கோட்டை எழுப்பினாள்
அகிலத்தை அறிய வைத்தவளே
அறிவுச் செல்வத்தை எனக்களித்திட்ட
தியாகச் சுடரல்லவா என் அன்னை
அன்னையின் அன்பிற்கு அகிலத்தில் நிகருண்டோ
வையகத்தில் உயரச் செய்து
அன்னையர் தின வாழ்த்தோடு வாழ்த்திடுவோம்