கவிதை 186
வாழ்ந்த சுவடுகள்
பிறந்த வளர்ந்த பாதையை
திரும்பிப்பார்க்க வைத்த தலைப்பு
அம்மப்பாவின் பெயரோ சுப்பர் சின்னத்துரை
அம்மம்மாவின் பெயரோ சரவணமுத்து பொன்னம்மா
அப்பப்பாவின் நாகலிங்கம் பொன்னம்பலம்
அப்பம்மாவின் பெயரோ வேலுப்பிள்ளை கதிராசிப்பிள்ளை
தாலாட்டி சோறு ஊட்டவில்லையே
எனும் கவலை எனக்குள் உண்டு
டிக்கோயாவில் வியாபாரம் செய்த அப்பப்பா
வெங்காயம் அறிமுகம் செய்தாரம் அம்மப்பா
மற்றைய மூத்தோர் சொல்லக்கேள்வி
அனுபவங்கள் எனக்கில்லையே
யார் செய்த பாவமோ
நன்றி
வணக்கம்