சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக 24.05.2022
தலைப்பு !
அணையா அகல்விளக்கே

ஆளுமை ஒளிச்சுடரே
ஆராதனை செய்கின்றேன்
நாளும் பொழுதெல்லாம்
நற்சிந்தனை விதைத்தீரே /

அணையா அகல்விளக்கே
அணைந்திட துடித்திட்டேன்
இணைகர பெண்ணியமே
இதயம் பொறுக்கலையே /

துணிவாய் வாழ்ந்திட
துணையாய் இருந்தீரேஅம்மா
தணியா கவித்தாகம்
தனிந்து அணைந்தனவோ /

பௌர்னமி முழுநிலவே
புன்னகை மதிமுகமே
மௌனமாய் கண்ணுறங்கி
மரணித்துப் போனீரோ /

கவித்துவக் காவியமே
கனத்திட மறந்தீரோ
புவியினில் கவிவாச
புகழ்பாடி பிரார்த்திப்போம் /
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி !😭😭😭🙏

அம்மா! அழகுத் தேவதையயே!
ஆற்றல் மிகு ஆசானே
நிலவாய் சிரிக்கும் முகத்தை எப்போ காண்போம்.
பெண்ணியத்தின் பெருநிதி. தன்னலமற்ற தாயே! தமிழ்ச்சுடரே! உங்களின் இறுதிக்கவியரங்கு என்றா? என்னையும் அழைத்தீர்கள்.

அம்மா உங்கள் பெருமையைக்கண்டு வியக்கின்றேன் . ஆழ்ந்தவேதனையுடன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
கோசல்யா அம்மா😭🙏

நன்றி வணக்கம் பாவை அண்ணா🙏😌